கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்ற சூழ்நிலையில், பணப்பட்டு வாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்தியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களை விடவும் தற்போது அதிக அளவில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் பெங்களூருவில் தொட்டபல்லாப்புராவில் இருக்கின்ற சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் திடீரென்று அவருடைய காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.
அதன் பிறகு காரை சோதனையை செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால் முதலமைச்சர் கார் விடுவிக்கப்பட்டது. இத்தகைய நிலையில், தேர்தல் பறக்கும் படையால் முதல்வரின் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.