இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் தகவல்..

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..


நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் லேலான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

RUPA

Next Post

” என்னுடன் ரொமான்ஸ் செய்வீங்களா..” வாட்ஸ்அப்-ல் வந்த செய்தி.. ரூ.1.5 லட்சத்தை இழந்த இளைஞர்..

Sat Apr 1 , 2023
ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் “ எனது மொபைல் போனில் வாட்ஸ்அப் செய்தி வந்தது, […]
c4129ea0c0bed9a30cf8b9e7d49cda38a9086000606906e15f27bc5aa618eace

You May Like