உங்களால் நம்ப முடிகிறதா..? நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்குமாம்..!! சுவாரஸ்ய தகவல்..!!

நத்தை என்பதே மிகவும் சிறிய மெதுவாக நகரக்கூடிய உயிரினங்களில் ஒன்று. இதற்கு கேட்கும் உணர்வுகள் கிடையாது. உப்புத்தன்மை இந்த உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கும். இருந்தாலும் இவற்றின் வாழ்க்கையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அவற்றின் தூக்கம் தான். அதாவது, சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், அதற்கான காரணம் என்னவென்றால் மெதுவாக நகர்வதில் பேர் போன நத்தை உயிர் வாழ்வதற்கு ஈரப்பதமான சூழலை தேடுகிறது.


அதற்காக அவை இயற்கை இலையே ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. இதனால், இயற்கையான வானிலை சூழ்நிலையை பொறுத்து அது 3 ஆண்டுகள் வரை தூங்குகின்றன. சில நத்தைகள் பகல் முழுவதும் தூங்கி விட்டு இரவில் மட்டும் புத்துணர்ச்சியுடன் நடமாடும். இதில் ஒரு சில நத்தைகள் சில ஆண்டு காலம் மட்டுமே உயிர் வாழும். பொதுவாக நத்தைகள் ஒவ்வொரு 13 முதல் 15 மணி நேர இடைவேளையில் தூங்குகின்றன. இந்த தூக்கத்தில் கிடைத்த ஆற்றலில் அடுத்த 15 மணி நேரங்கள் வேலை செய்து மீண்டும் தூங்குகின்றன. சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் 3 வருடங்கள் வரை தூங்குகின்றன. புவியியல் அடிப்படையில் நத்தைகள் வெப்பமான தட்பவெப்ப நிலைகளில் இருந்து தப்பிப்பதற்கு அடிக்கடி உறங்கும் என்று கூறப்படுகிறது.

CHELLA

Next Post

கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்...! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு...!

Sun Apr 9 , 2023
கேரளாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் வேறு சில உடல் ரீதியான நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது முக்கியம். மாநிலத்தில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர், கொரோனா தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், நீரிழிவு போன்ற […]
images 2023 04 09T074554.053

You May Like