கட்டுக்கடங்காமல் பரவிய காட்டுத்தீ..!! 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்..!! பரபரப்பு

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் 420 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும், 10-க்கும் மேற்பட்ட கட்டடங்களும் சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6 ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

CHELLA

Next Post

’எனக்கு 16 வயசுதான் ஆகுது’..!! பள்ளி மாணவியை விடாமல் துரத்திய சிறுவன்..!! இறுதியில் நேர்ந்த சோகம்..!!

Wed Apr 12 , 2023
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). இவர், தனது தாய் லட்சுமம்மாவுடன் வசித்து வந்தார். இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனோகர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதேபகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மனோகரின் காதலை பள்ளி மாணவி ஏற்கவில்லை. நீண்டகாலமாக மாணவியின் பின்னால் சென்று காதலை […]
Crime 3

You May Like