fbpx

இஞ்சி பால் கேள்விப்பட்டிருக்கீங்களா?… இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும் தெரியுமா?… டிரை பண்ணுங்க மக்களே!…

இஞ்சி பால் குடிப்பதால், சிகரெட் பிடித்து அதனால் நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். மேலும் இது தரும் பலன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

இஞ்சிபால் குடிப்பதால் நுரையீரல் சுத்தமாகும். சிகரெட் பிடித்து அதனால் நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம். இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் அதை நீக்கி விடும். அதனால் மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும். இதனை தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்.

Kokila

Next Post

4 பேரில் ஒருவருக்கு வெளிப்படையான ஆபத்து காரணிகள் இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம்.. புதிய ஆய்வில் தகவல்..

Fri Apr 14 , 2023
ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன. மாரடைப்புக்கு உயர் ரத்த […]

You May Like