கொரோனா பாதிப்பு எப்போது உச்சத்தை எட்டும்..? ஐஐடி பேராசிரியர் சொன்ன முக்கிய தகவல்..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 11,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதன் காரணமாக பல மாநிலங்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. அந்த வகையில் ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..


தமிழகத்தை பொறுத்த வரை, கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. அதாவது கொத்து கொத்தாக கொரோனா பரவவில்லை.. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் ஐஐடி கான்பூர் பேராசிரியரான டாக்டர் மணிந்தீர அகர்வால் கொரோனா பரவல் குறித்து கொரோனா பரவல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டலாம். அதன்படி மே மாதத்தில் 50,000 முதல் 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட மக்களிடம் உள்ள நோயெதிர்ப்பு சக்தி என்பது 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவது ஆகியவை காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. மேலும் தற்போது லேசான பாதிப்பு தான் உள்ளன. சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் வீடுகளிலேயே தனிமை சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை அதிகமாக இல்லை.. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!! அடித்துக் கொன்று மண்ணில் புதைத்த கொடூரம்..!!

Sat Apr 15 , 2023
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் திருமாவளவன் (24). இவர் கும்பகோணத்தில் அறுவடை இயந்திரம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கும்பகோணத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். ஆனால், அன்று இரவில் இருந்து திருமாவளவன் வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லாமல் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து வீட்டில் […]
crime scene murder

You May Like