fbpx

6ஆம் வகுப்பு மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம்..!! கதறியதால் கழுத்தறுத்துக் கொலை..!!

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர், லிப்ட் கொடுப்பதாக கூறி சிறுமியை அழைத்துள்ளார். முதலில் சிறுமி டாக்சியில் ஏற மறுத்துள்ளார். இருப்பினும் அவர் அன்பாக பேசி வலுக்கட்டாயமாக கூறியதால் சிறுமி டாக்சியில் ஏறியுள்ளார். வீட்டுக்கு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் பகுதியில் டாக்சியை நிறுத்தி, அந்த மாணவிக்கு தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு புறப்பட்டு சென்ற நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் டாக்சியை நிறுத்திவிட்டு அந்த சிறுமியை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர், அங்கேயே கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பினார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சுமார் 3 நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் அந்த காட்டுப்பகுதியில் கிடப்பதை அறிந்து போலீசார், அங்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டனர். விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால், கால்டாக்சி ஓட்டுநர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர். அவர் பெட்ரோல் பங்க் சென்ற சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ஐபிஎல் தொடரால் கோடீஸ்வரர்களான இந்திய வீரர்கள்….!

Thu Apr 20 , 2023
மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புமிக்க வீரராக உள்ளார் இஷான் கிஷன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ipl சீசனின் போது 35 லட்சத்திற்கு குஜராத் லயன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய திறமையான ஆட்டத்தின் காரணமாக இவருடைய டிமாண்ட் ஐபிஎல் சீசனில் அதிகரித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற […]
ஐபிஎல் தொடரை மொபைல், லேப்டாப்பில் இலவசமாக பார்ப்பது எப்படி..? இதை மட்டும் பண்ணா போதும்..!!

You May Like