தமிழ்நாட்டில் காலை உணவு சாப்பிடாமல் சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள் ஆகவே அவர்கள் பசியில் வாட கூடாது என்பதற்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது, அதில் ஒன்றுதான் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்.
இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த திட்டம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாணவர்களும் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும், பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரித்தல், அதோடு கல்வியை தக்க வைத்துக் கொள்ளுதல், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பாதிக்கப்படாமல் இருத்தல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.