பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிஎஸ்எல்வி மற்றும் என்எஸ்ஐஎல் குழுவினர் அனைவருக்கும் SPACE- X நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 741 கிலோ எடை கொண்டுள்ள இந்த செயற்கைகோள் பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் மூலம் விண்ணில் நேற்று முன்தினம் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி ராக்கெட் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு மிகவும் சிறந்தது என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. தற்போது என் எஸ் ஐ எல் நிறுவனம் வசம் 10 பி எஸ் எல் வி ராக்கெட்டுகள் முழுக்க வணிகரீதியான பயன்பாட்டுக்கென இருப்பதாகவும் இதன் மூலம் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தி, என்.எஸ்.ஐ.எல் நிறுவனம் பல்வேறு ராக்கெட்களை அதிக அளவில் தயாரிக்க உதவும்.
இந்த தனியார் ராக்கெட்டுகளை வெற்றி கரமாக விண்ணில் ஏவிய இந்தியாவிற்கு எலான் மஸ்க் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.