முதலாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரை மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து நடத்துகின்றன. மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ (CCI) மற்றும் ‘வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை […]

இந்தியாவில் விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கும் எளிதாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் இந்தப் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் […]

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இமயமலைப் பகுதியில் நிலவும் மற்றொரு தீவிர இயற்கை ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலைச்சரிவுகளில் உறுதியற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் திடீரென உடைந்து விழுந்தால், மிகப்பெரிய பனிச்சரிவு உருவாகி அதன் தொடர்ச்சியாக வெள்ளம், சேற்றுப் பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவிலும் இதுபோன்ற ஆபத்தான பனிப்பாறைகள் இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘Hanging Glacier’ என்றால் என்ன? பொதுவாக […]

இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியை இலங்கை காலிமைதானத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) இன்று தொடங்குகிறது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 600 டெஸ்ட் போட்டிகளை எட்டிய 3-வது நாடு என்ற மகத்தான சாதனையை இந்தியா பெறுகிறது. அடிமைப்பட்ட இந்தியாவில் 1932-ல் தொடங்கி இன்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்திய டெஸ்ட் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்வோம். […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

காங்கோ மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருவதால், இந்திய அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்து வருகிறது. எபோலாவின் மிகவும் ஆபத்தான ‘Bundibugyo’ வகை (strain) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஜனநாயகக் குடியரசு காங்கோ (DRC), உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு, மிகவும் […]

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதன் மூலம், தனது அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவை முந்தி, இந்தியாவின் மிகப் பணக்கார முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘DKS’ என்றும் அழைக்கப்படும் 64 வயதான டி.கே சிவக்குமார், தனது நிகர சொத்து மதிப்பு ரூ.1,413 கோடிக்கும் அதிகம் என்று […]