அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மூலம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
விமான நிறுவனம் சக பயணிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைத்ததாக கூறிய டிஜிசிஏ, இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது “அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் எண். AA 292 மூலம் நியூயார்க்கில் இருந்து வந்த இந்திய பயணி ஒருவர் குடிபோதையில் சக பயணியிடம் வாக்குவாதம் செய்து அவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்பட்டது. புகாரை எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.