அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் கட்டாய ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டை (HSR) அறிமுகப்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
Bournvita சர்ச்சையின் பின்னணியில், HSR அல்லது பட எச்சரிக்கை லேபிள்கள் சிறந்த யோசனையா என்பதை விவாதிக்க உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை பங்குதாரர்களுடன் இந்த மாதம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.
12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து போர்ன்விட்டாவின் மான்டெல் இந்தியா நிறுவனம், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. “சட்டரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் இந்த வீடியோவை நீக்குகிறேன்” எனக் கூறிய ஊட்டச்சத்து நிபுணரான ரேவந்த் ஹிமத்சிங்கா அந்த வீடியோவை நீக்கினார்.
இந்தியாவின் அபெக்ஸ் குழந்தை உரிமைகள் அமைப்பு, ஏப்ரல் 26 அன்று, Bournvita விற்கும் நிறுவனமான Mondelez இன்டர்நேஷனல் இந்தியா லிமிடெட்டிடம், பால் சப்ளிமெண்ட் தொடர்பான அனைத்து தவறான விளம்பரங்களையும், பேக்கேஜிங் மற்றும் லேபிள்களையும் மதிப்பாய்வு செய்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானம் ‘போர்ன்விட்டா’. இதில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருக்கிறது என சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டது. மக்களிடையே இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், மாண்டலிஸ் இந்தியா நிறுவனம் ரெவன்ட் ஹமாட்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. பதிவிட்ட வீடியோவையும் நீக்கிவிட்டார். ஆனாலும் பலர் அந்த வீடியோவை பார்த்துவிட்டதால், போர்ன்விட்டா தயாரிக்கும் நிறுவனம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், வெளியிட்ட புதிய அறிவிப்பில், இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் (FSSAI) லேபிளிங் மற்றும் காட்சி விதிமுறைகளின்படி, சர்க்கரையின் மதிப்பு சேர்த்த பொருட்களுக்கு சிவப்பு வண்ணக் குறியீட்டைக் காட்ட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
“உங்கள் தயாரிப்பு, ‘மால்டோடெக்ஸ்ட்ரின் திரவ குளுக்கோஸ்’ என்ற லேபிள்களைப் பயன்படுத்தி வரம்பைத் தாண்டியதாகத் தெரிகிறது, இது “சர்க்கரை சேர்க்கப்பட்டது..” என்ற பிரிவிலான தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் குறித்த விரிவான விளக்கத்தையும், அதன் அறிவிப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு போர்ன்விட்டா நிறுவனத்திடம் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும், இந்த விவகாரத்தை உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ-க்கும் அனுப்பியுள்ளது.
மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் விளக்கம்: முன்னதாக, இது தொடர்பாக மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. “70 வருடங்களாக போர்ன்விட்டா இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. எங்களுடைய தயாரிப்பு தரமானது. எல்லா தரச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, முறையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ன்விட்டாவில் உள்ள உட்பொருள்கள் அனைத்தும் தர சான்றிதழ் பெற்றவை என்றும் அதில் வெளிப்படை தன்மை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் வெளியான வீடியோ மக்களிடம் நாங்கள் பெற்றிருந்த நம்பிக்கையை குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. தவறான தகவலால், எங்களுடைய நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என மாண்டலிஸ் இந்தியா நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், Bournvita சர்ச்சையின் பின்னணியில், HSR அல்லது பட எச்சரிக்கை லேபிள்கள் சிறந்த யோசனையா என்பதை விவாதிக்க உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை பங்குதாரர்களுடன் இந்த மாதம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் கட்டாய ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டை (HSR) அறிமுகப்படுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.