தெலுங்கானாவில் சிறுவனுக்கு கண் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதில் பெவிக்விக் என்னும் பசையை மருத்துவர்கள் ஒட்டி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் ஆயிஜாவில் வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினரின் மகன் பிரவீன் எனும் சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அதாவது, நெற்றியில் தையல் போட வேண்டிய நிலைமை இருந்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர் அந்த இடத்தில் தையல் போடாமல் பெவிக் விக் எனப்படும் பசையை கொண்டு ஒட்டியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.