கூகுள் நிறுவனத்தின் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஊழியர்..!! காரணம் என்ன..?

கூகுள் நிறுவனத்தின் 14-வது மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து 31 வயது சீனியர் மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்த அந்த நபர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 33 வயதான கூகுள் ஊழியர் ஜேக்கப் பிராட், பிப்ரவரி 16ஆம் தேதி மன்ஹாட்டனில் உள்ள அவரது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது சில மாதங்களுக்கு பிறகு மற்றொரு கூகுள் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

CHELLA

Next Post

இந்த வயதில் செய்யக்கூடிய காரியமா இது…..? 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 81 வயது முதியவர் மேற்கு வங்கத்தில் பரபரப்பு……!

Sun May 7 , 2023
மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த சிறுமியை அருகில் உள்ள தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
Rape 2

You May Like