ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சொகுசு காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அதன் பிறகு நடத்திய விசாரணையில், ஜார்கண்ட் மாநில பதிவில் கொண்ட அந்த கார் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ராமநாத சுவாமி கோவிலில் தொகுப்பு புதிய பணியாளராக பணியாற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தனசேகரன் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றன.