ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கேட்பாறற்று நின்ற சொகுசு கார்….! கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கோவில் பணியாளர்…..!

ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.


இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சொகுசு காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அதன் பிறகு நடத்திய விசாரணையில், ஜார்கண்ட் மாநில பதிவில் கொண்ட அந்த கார் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ராமநாத சுவாமி கோவிலில் தொகுப்பு புதிய பணியாளராக பணியாற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தனசேகரன் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றன.

Next Post

’இவரின் படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன்’..!! மேடையில் ஓபனாக பேசிய வெங்கட் பிரபு..!!

Wed May 10 , 2023
லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் […]
’இவரின் படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன்’..!! மேடையில் ஓபனாக பேசிய வெங்கட் பிரபு..!!

You May Like