அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

உணவின்றி நம்மால் உடல் உழைப்பில் ஈடுபட முடியாது. அதேபோல், அளவுக்கு மீறி உணவுப்பொருள்களை சாப்பிடும் போது பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பது அத்தியாவசிய கடமையாக உள்ளது. இல்லையென்றால் எடை அதிகரிப்பு முதல் நீண்ட கால சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆம், நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடும் போது தேவையில்லாத கொழுப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.


அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் :

* உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும்

* பசி ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்

* நோய் அபாயத்தை அதிகரிக்கும்

* மூளை செயல்பாட்டை பாதிக்கும்

* மந்தமாக உணர வைக்கும்

* அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்

அதிகமாக சாப்பிடுவதை எப்படி தடுப்பது..?

பிடித்த உணவுகள் என்று வரும் போது நம்மை கட்டுப்படுத்தாமல் அதிகளவில் சாப்பிடுவோம். இந்த நேரத்தில் நீங்கள் மனதைக் கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மை அறியாமலேயே நினைத்த நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒருவேளை நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுங்கள். இதோடு மெதுவாக சாப்பிடுவதிலும், உணவை நன்றாக மென்று சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகப்படியான உணவு உண்பது பல்வேறு வியாதிகள் மற்றும் வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட உணவை குறைவாக உட்கொள்ளவும், உங்கள் போர்ஷன் அளவை (Portion Sizes) குறைக்கவும், உங்கள் உணவை பெரும்பாலும் சத்தான உணவுகளை அடிப்படையாக கொள்ளவும் வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

CHELLA

Next Post

4️ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியர் அதிரடி கைது…..! டெல்லியில் பரபரப்பு…..!

Fri May 12 , 2023
தலைநகர் டெல்லியில் ரோகிணி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அந்த சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் சுனில்குமார் (43) என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை தனியாக […]
delhi school

You May Like