பல்கலைகழகத்தில் நடந்த பயங்கர சம்பவம்…..! மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் காண்பூரைச் சேர்ந்த அனுஜ் என்ற மாணவர் படித்து வருகிறார். மேலும் இவர் தனுடன் படிக்கும் மாணவியான நேகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.


இப்படியான சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து காதலி நேகாவை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே காதலி நேகாவை சுட்டு கொலை செய்த அனுஜ், பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்கு சென்று அங்கே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அந்த மாணவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

#Job Notification: தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...!

Sat May 20 , 2023
HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Management Trainee பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 1 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like