ராகுல் காந்தி தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெற நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்றும் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கூறியிருக்கிறார்.
தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது சற்றேற குறைய 100 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் தற்போது தேவைக்கு இடம் பற்றாக்குறை நிலவு இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமர்வதற்கு வசதி இல்லாதது தான் காரணமாக உறுப்பினர்களின் பணி திறனும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் அடிப்படையில், கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் அடிகளை பிரதமர் நரேந்திர மோடி புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் தரமான கட்டுமானத்துடன், சரியான சமயத்திலும் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று மக்களவை தலைவர் ஓம்.பிர்லா கோரிக்கை வைத்தார். இதன்படி புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். ஆனால் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.