சினிமா எனும் மாய உலகம் எல்லோருக்கும் எல்லாம் கதவைத் திறப்பதில்லை. கதவின் வாசலிலேயே வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், வெறுங்கையுடனே தங்களது காலத்தை முடித்துக் கொள்கிறார்கள். கதவுக்கு அருகே வரை கையில் சாவியுடன் செல்பவர்கள் திறக்க தெரியாமல் திரும்பி விடுகிறார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்து கொண்டு இந்த விளையாட்டில் இல்லாமல் இருப்பவன், உள்ளே நுழைந்து சிம்மாசனத்தில் அமர்கின்றான். பலரது வாழ்க்கை இப்படி இருக்க, வைபவிக்கு திறமை, அதிர்ஷ்டம் வாய்ப்பு என அனைத்தும் ஒரே நேரத்தில் அமைந்தது.
அழகு தேவதையாக இந்தி சீரியல்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாய். 32 வயது கூட இன்னும் நிரம்பாத நிலையில், கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரபல ஸ்டார் ஒன் சேனலில் ஒளிபரப்பான ‘சாராபாய் vs சாராபாய்’ தொடரில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். இந்த சீரியலின் 2-வது சீசனிலும் வைபவி தான் ஹிட்டு, ஹாட் எல்லாமே. இந்த சீரியல் விசிட்டிங் கார்டு மூலமாக பல சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் அவர் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.