இன்னும் 2 நாட்களில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்..!! அமைச்சர் வீட்டுக்கு தீவைப்பு..!! ராணுவம் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

Thu May 25 , 2023
மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு நாகா மற்றும் குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், இம்மாத தொடக்கத்தில் மணிப்பூரின் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கிடையே, சில நாட்கள் அமைதி திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் (Bishnupur) மாவட்டத்தில் […]
WhatsApp Image 2023 05 25 at 2.07.26 PM

You May Like