டெல்லி நீதிமன்றத்தில் பெண் நீதித்துறை அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
2015 அக்டோபரில், நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பெண் நீதித்துறை அதிகாரியை அவமதித்ததற்காக வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோரின் மேல்முறையீட்டை பெஞ்ச் ஏற்க மறுத்துவிட்டது.
போக்குவரத்து அபராதம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் வழக்கறிஞர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. நீதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, நீதிமன்ற அறைக்குள் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தினார்..
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எந்தவொரு நீதித்துறை அதிகாரியின் மீதும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, சட்டம் அதைச் சரிசெய்து மீட்டெடுக்கும் நூலாகச் செயல்பட வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான துஷ்பிரயோகம் மூலம் ஒரு நீதிபதியை அச்சுறுத்தும் அல்லது மிரட்டும் எந்தவொரு செயலும் நீதியின் மீதான தாக்குதல் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.