கொளுத்தும் வெயில்!… நாள் முழுக்க ஏசி யூஸ் பண்றீங்களா?… ஆபத்து!… என்னென்ன பின்விளைவுகள் தெரியுமா?

வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​ஏசியின் தேவை அதிகரிக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, கார், பஸ், ரயில் என எங்கு இருந்தாலும் ஏசியில் இருக்க சிலர் விரும்புகிறார்கள். ஏசியில் வரும் சில்லென்ற காற்று நமக்கு ரிலாக்ஸாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக ஏசி உபயோகம் செய்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. சில வீடுகளில் ஏசியை ஆப் செய்யாமல் நாள் முழுக்க இயங்க வைத்துள்ளனர். இதனால் கரண்டு பில் ஒரு பக்கம் எகிற உடல் நலமும் பாதிக்கிறது. உடலை வாட்டும் வெப்பத்தில் இருந்து ஏசி நம்மை காப்பாற்றும். ஆனால் ஏசி அறை அல்லது ஏசி இருக்கும் காரில் அதிக நேரம் இருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.


ஏர் கண்டிஷனரின் காற்று நம்முடைய வாயை வறண்டு போக செய்கிறது. அதிகமாக ஏசி காற்றில் இருக்கும்போது உங்களுடைய வாய் வறண்டு, எரிச்சல் ஏற்படலாம். இதை தடுக்க நீங்கள் அவ்வப்போது ஏசி அறையை விட்டு வெளியே செல்ல வேண்டும். ஏசி அறையில் இருக்கும் போது உடலில் உள்ள ஈரப்பதம் விரைவில் ஆவியாகும். இதனால் அடிக்கடி தாகம் ஏற்படும். உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.ஏசி அறையில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு தலைவலி மாதிரியான பிரச்சனைகள் வரும். ஏசியின் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் ஏசி அறை, காரில் இரவும் பகலும் இருப்பவர்கள் ஏசியில் இல்லாத மற்றவர்களை காட்டிலும் அதிக சோர்வையும் பலவீனத்தையும் சந்திக்க நேரிடும்.

KOKILA

Next Post

மாணவர்களே கவனம்...! ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ தேர்வு...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்....!

Sat May 27 , 2023
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று மாலை வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like