தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதே நேரம் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆகவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணி ஈடுபட்டு வருகிறார்கள்.