நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் இலவச ரேஷன் அரிசி வாங்குபவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதியை மனதில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் இலவச ரேஷன் பெரும் வசதியை பெறுவதில் சிக்கல் உண்டாக்கலாம்.
அதாவது ரேஷன் கார்டைப் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் உடன் இணைக்க அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்குரிய காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் இருக்கிறது. இனைப்பதன் மூலமாக வெகு காலத்திற்கு நீங்கள் வெகுகாலத்திற்கு இலவச ரேஷன் அரிசியை பெரும் பலனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இலவச ரேஷன் பெற்று வருவோர் தங்களுடைய ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.