இன்ஸ்டாகிராம் மூலம் LKG தோழியை கண்டுபிடித்த பெண்..!! 18 வருடங்களுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

நேஹா என்ற பெண், தனது எல்.கே.ஜி (LKG) தோழியான லக்ஷிதாவைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கினார். தான் பார்க்க விரும்பும் குழந்தைப் பருவத் தோழியின் முழுப் பெயரைக்கூட அவரால் நினைவுகூர முடியவில்லை. அந்தக் கணக்கிற்கு @finding_Lakshita என்று பெயரிட்டு தன்னிடம் இருந்த ஒரே ஒரு குழந்தைப்பருவ ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயோவில் தன் தோழியைப் பற்றி சில தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார். “நீண்டகாலத்துக்கு முன் தொலைந்து போன என் பால்யகால தோழி லக்ஷிதா. வயது 21. அவளது சகோதரன் குணால். இருவரையும் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கிறேன்” என்று அவர் தனது பயோவில் குறிப்பிட்டிருந்தார்.


நேஹா இன்ஸ்டாகிராமில் தனது தோழியின் பெயரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கத் தொடங்கினார். இறுதியில், லக்ஷிதாவைக் கண்டுபிடித்துவிட்டார். லக்ஷிதாவே நேஹாவின் பதிவைப் பார்த்துவிட்டு அவரைத் தொடர்புகொண்டார். இருவரும் இணைந்துவிட்டதால், @finding_lakshita பக்கத்தை புதுப்பித்துள்ளார். “தேடும் பணி வெற்றிகரமாக முடிந்தது. கடைசியில் நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார். “இறுதியாக!!! நான் உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். உன்னைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. ஆனால், எப்படியோ நான் கண்டுபிடித்துவிட்டேன். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு உன்னைத் தொடர்புகொள்வது நம்பமுடியாததாக இருக்கிறது” என்றும் எழுதியுள்ளார்.

“எனக்கு எல்கேஜியில் (2006) லக்ஷிதா என்ற பெயருடைய ஒரு தோழி இருந்தாள். அவள் ஜெய்ப்பூருக்குச் சென்றுவிட்டதால், அவளுடனான தொடர்பை இழந்துவிட்டேன். அவளுடைய குடும்பப்பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை” என்று அவர் தெரிவிக்கிறார். இந்தப் பதிவில் கமெண்ட் செய்த லக்ஷிதா, “நீ என்னை அழ வைத்துவிட்டாய்” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/CsgznyxhRKJ/?utm_source=ig_embed&ig_rid=f927dc8a-9e38-4eb7-912c-8349df844875

“நானும் என் பால்யகால தோழியை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது படம் கூட என்னிடம் இல்லை. நான் அவளை விரைவில் கண்டுபிடிப்பேன் என நினைக்கிறேன்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “இறுதியாக ஒரு விலைமதிப்பற்ற ரீல் கிடைத்திருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார். “சில நேரங்களில் சமூக ஊடகங்கள் சிறப்பாக உதவி செய்கின்றன”  எனவும் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

CHELLA

Next Post

ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!!

Sun Jun 4 , 2023
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆனால், ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் எடுக்கும் பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் மூலமும் பலன் இழப்பீடு பெறலாம். ரயில்வே பயணக் காப்பீட்டு எடுக்க பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் […]
Train

You May Like