மக்களே…! ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர், சிகிச்சை பெறுவோரை அடையாளம் காண இணையதளம்…!

ஒடிசாவின் பனாகாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தங்களின் உறவினர்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு உதவும் வகையில் ஒடிசா அரசின் உதவியுடன் ரயில்வே அமைச்சகம் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.


அதன்படி கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை கொண்டு இறந்தவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள், அடையாளம் தெரியாத உடல்களுக்கு உரியவர்களை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கண்டறியலாம்.

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோரின் புகைப்படங்களை கொண்ட இணைய தள முகவரி https://srcodisha.nic.in/Photos%20Of%20Deceased%20with%20Disclaimer.pdf

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் பட்டியலை https://www.bmc.gov.in/train-accident/download/Lists-of-Passengers-Undergoing-Treatment-in-Different-Hospitals_040620230830.pdf என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத நபர்களின் பட்டியலை https://www.bmc.gov.in/train-accident/download/Un-identified-person-under-treatment-at-SCB-Cuttack.pdf என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளது.

இது தவிர ரயில்வே உதவி எண் 139-லும், புவனேஸ்வர் மாநகராட்சி உதவி எண். 18003450061 அல்லது 1929 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

முன்பே எச்சரித்த வல்லுநர்கள்..!! வேலையை காட்டத் தொடங்கிய AI..!! ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு..!!

Tue Jun 6 , 2023
AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆனது என்றே சொல்லலாம். இது டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடிக்கு […]
AI

You May Like