அடேய்..!! என்னடா இப்படி இறங்கிட்டீங்க..!! தோட்டத்தில் விளைந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு..!!

தக்காளி விலை உயர்ந்திருக்கும் நிலையில், தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில தினங்களாகவே, காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை, ராக்கெட் வேகத்தில் ஏறியுள்ளது. 1 கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அன்றாட சமையலுக்கு தக்காளி கண்டிப்பாக தேவை என்பதால், அதிக விலை என்றாலும் இல்லத்தரசிகள் வாங்குகின்றனர். இதனால் தக்காளிகளுக்கு ‘டிமாண்ட்’ அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகள் திருடப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. பெங்களூரு அருகே ஹாசன் மாவட்டம் கோனிசோமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தரணி. இவர், தன் விவசாய தோட்டத்தில், தக்காளி பயிரிட்டு வளர்க்கிறார். தக்காளிகள் பழுத்து அறுவடை செய்ய தயாராக இருந்தது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தக்காளிகளை பறித்து 60 மூட்டைகளில் நிரப்பி தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று காலை, தரணி தோட்டத்திற்கு சென்ற போது தக்காளிகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, திருடர்களிடம் இருந்து தக்காளியை காப்பாற்ற, இரவு, பகலாக தோட்டம் நிலத்தில் விவசாயிகள் காவல் காக்கின்றனர். ஹாவேரியிலும், திருட்டு அதிகரித்துள்ளது. ஹனகல்லின், ஆலுாரு கிராமத்தில் வசிக்கும் விவசாயி மல்லப்பா, தக்காளி பாதுகாப்புக்கு தனது வயலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளார். தனக்கு தெரிந்தவரின் வீட்டில் இருந்து, கண்காணிப்பு கேமராவை வாங்கி வந்து பொருத்தியுள்ளார். இதேபோல, சந்தையிலும் திருட்டு நடப்பதால், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Chella

Next Post

’ஆபாச நடிகைகள் போல் நீ மாறனும்.. அப்புறம் நான் உன்னை’..!! கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்த மனைவி..!!

Thu Jul 6 , 2023
டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து அவரது கணவர் தொல்லை கொடுத்து வருகிறாராம். அதுவும் இல்லாமல், அந்த ஆபாச பட நடிகைகள் அணியும், டிரஸ்களை போலவே, மனைவியையும் அணிய சொல்லி டார்ச்சர் செய்கிறாராம். அந்த படத்தில் உள்ளதைபோலவே, டிரஸ் செய்துகொண்டு, கணவர் முன்னாடி போய் நிற்க […]

You May Like