சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, மாதம் ஒன்றுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, மாநிலம் முழுவதும் மின்சார விலையை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.89 உயர்த்தியுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் வழங்கப்படும் க்ருஹ ஜோதி’ திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம் 200 யூனிட்கள் வரை வழங்கப்படும். 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டம் குத்தகைதாரர்களுக்குப் பொருந்தும்” என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்.