10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா 3 மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நடிகர் விஜய்யின் உத்தரவுப்படி வரும் 17ஆம் தேதி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. convention centre-ல் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் இதனை அரசியலுக்கு வருவதற்கு அடித்தளமாக இதனை செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தற்போது புதிதாக விஜய் இதனை செய்யவில்லை எனவும் விஜய் பல வருடங்களாக இதனை செய்வதாகவும் அவரது ரசிகர்கள் வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.