திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021 ஆம் வருடம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த தகவல் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது.
இந்த செய்தியை தவறாக சித்தரித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், திமுகவை சார்ந்த 5 பேர் சாராயம் காய்ச்சிய போது கைதியின்றி புகைப்படத்தை மார்டின் செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் பெயர் காஞ்சிபுரத்தை சார்ந்த சரவணபிரசாத்(52).
இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்ரமணியம் என்பவர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, திருப்பூர் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சரவண பிரசாத் பொய்யான செய்தியை திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பதிவிட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கோவையில் இருந்த சரவணபிரசாத்தை திருப்பூர் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.