கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மங்குழியில் குஞ்சுமோன்(50) என்ற நபரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள […]

புதுடெல்லியில் இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி, அதற்கு ஒத்துழைக்காத தனது நண்பனைக் கொன்றதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜலோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞரான, பிரமோத்குமார் சுக்லா. அவரது நண்பர் ராஜேஷ் குமார் பீகார் மாநிலம் மாதேபுராவைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஜனவரி 17ஆம் டெல்லியில் உள்ள மோரிகேட் டிடிஏ பூங்காவில் அமர்ந்து […]

முஸ்லிம் ஆர்வலர் பழனி பாபாவைக் குறித்து, அவதூறு பரப்பும் செய்தியை, சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, திருச்சியைச் சேர்ந்த பிஜேபியின் ஐடி பிரிவு செயலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இட்ட அந்தப் பதிவு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜிஹாத் கமிட்டியின் நிறுவனரான முஸ்லீம் ஆர்வலர் பழனி பாபா ஜனவரி 28, 1997ஆம் ஆண்டு படுகொலை செய்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினமாகிய கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிஜேபி ஐடி பிரிவின் […]

மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாகர்கோவில் பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோட்டாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி […]

தலைநகர் டெல்லியை சார்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பையை சுத்தம் செய்வதற்காக அந்த பெண்ணை அழைத்துள்ளனர். […]

உத்திரபிரதேச மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததா சொந்த சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 19 வயது இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அஞ்சலி. இவருக்கு சுரபி(6) மற்றும் ரோஷினி(7) என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர். அஞ்சலி தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் […]

பிறந்தநாள் கொண்டாட்டம் எனக் கூறி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதாக கூறி மாணவியை அழைத்து இருக்கின்றனர். அவர்களது பேச்சை நம்பி அந்த மாணவியும் அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்று இருக்கிறார். அங்கு சென்ற பின்பு தான் […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சீதாப்பூர் என்ற ஊரில் வசித்து வருபவர்கள் மோதிலால் சௌஹான் மற்றும் ரஜினி தம்பதி. இந்த தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. […]

கள்ளக்காதல் காரணமாக கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு மலர் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் […]

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், […]