ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 288-க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 10 பேர் கொண்ட சிபிஐ குழு பாலசோர் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மூன்று ரயில் விபத்து குறித்து 7-ம் தேதி விசாரணையைத் தொடங்கினர். விபத்து நடந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததில், கணினி முறையில் இயங்கும் இன்டர் இன்டர்லாக்கிங் அமைப்பை மூடிவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்தவிபத்து நேர்ந்துள்ளது என சிபிஐ முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.