fbpx

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கும் அதிமுக…..!

சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர் இதனை தொடர்ந்து அதற்கு நெஞ்சு வலி உண்டானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தில் அடைப்பு உள்ளதாகவும் உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி வசம் இருந்த 2 துறைகளையும் மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக மாற்றக்கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே தமிழக ஆளுநரை இன்று மாலை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து தமிழக அமைச்சர் அருகில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கூறி மனு வழங்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

Next Post

மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற ஆந்திர மாணவி கத்தியால் குத்தியதில் நடந்த சோகம்...!!

Thu Jun 15 , 2023
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஷ்வினி ரெட்டி என்ற மாணவி, மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்த நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் நேற்று காலை கத்தியால் குத்தியதில் மாணவி தேஜஷ்வினி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெம்பிலேயில் தேஜஷ்வினி இருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியான அகிலா கத்திக் குத்து காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த […]

You May Like