விஜய் டிவி காமெடி நடிகரின் காலை உடைத்த காதல் மனைவி..!! கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெறிச்செயல்..!!

சன் டிவி, விஜய் டிவி போன்ற சின்னத்திரையில் மிகப் பிரபலமான காமெடி நடிகரும், “கலக்கப்போவது யாரு” “அசத்தப்போவது யாரு” நிகழ்ச்சிகளில் காமெடி செய்ததன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ். அவருடன் சேர்ந்து கிறிஸ்டோபர், சசி, பாலா என்ற நான்கு நபர்களும் செய்யும் காமெடிக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் அவருக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் தனது காரில் அவரும், அவரது டிரைவரும் சென்று கொண்டிருந்தபோது வழியில் 3 நபர்கள் வழிமறித்து டிரைவரை மிரட்டி, அங்கிருந்து ஓட செய்துவிட்டு, வெங்கிடேஷை காருடன் கடத்தி சென்று, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கி அடித்து, உதைத்து இரண்டு கால்களையும் அடித்துள்ளனர்.

விஜய் டிவி காமெடி நடிகரின் காலை உடைத்த காதல் மனைவி..!! கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெறிச்செயல்..!!

வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தவுடன், அவரை கொடூரமாக தாக்கியவர்கள் இந்த சம்பவத்தை திசை திருப்ப இரண்டு உருட்டு கட்டைகளையும், ஒரு பிஜேபி கட்சியின் துண்டையும் அங்கே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இரண்டு கால்களும் உடைபட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசை பொதுமக்கள் மீட்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், காரில் இருந்து இறங்கி ஓடிய டிரைவர் மோகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வெங்கடேசை பார்த்து கதறி அழுத டிரைவர் காவல்துறை உதவியோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அதன் பிறகு தான் இந்த சம்பவத்தில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேஷை தாக்கிய நபர்கள் பாஜகவை சேர்ந்தவர்களா? எதற்காக அவரை அடித்து கால்களை உடைத்து விட்டு, அங்கே பாஜகவின் கட்சி துண்டை கீழே வீசி சென்றார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என தங்களது பாணியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலில் சிக்கியவர் வெங்கடேசனின் கார் டிரைவர் மோகன் தான். எதற்காக காரை விட்டு இறங்கி ஓடியவர், எப்படி இவர் இருக்கும் இடம் தேடி வந்தார். இது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக வெங்கடேசனின் காதல் மனைவி ஈடுபட்டுள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடைய காதல் மனைவி மற்றும் காவல்துறையில் உள்ள மனைவியின் அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே டிரைவர் மோகன் மற்றும் கூலிப்படையினர் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வெங்கடேசனின் டிரைவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள நட்பு வெங்கடேசனையும் அவரது மனைவியும் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருந்ததால் பாஜாகவினர் வெங்கடேசிற்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார் டிரைவர் மோகன் மற்றும் வெங்கடேசனின் மனைவி, அவரது அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வெங்கடேசின் கால்களை உடைத்து விட்டு, அங்கு பாஜக கொடியை கொடியை வீசி சென்றால், இந்த வழக்கு பாரதிய ஜனதா கட்சியினருக்கு அவ பெயரை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தை நடத்தி உள்ளார்கள். ஆனால், விசாரணையில் இவர்களது கூட்டு சதி அம்பலம் ஆகியுள்ளது.

இருந்த போதிலும் காதல் மனைவியே ஈவு இரக்கமில்லாமல் மக்களை மகிழ்வித்த கலைஞர் வெங்கடேஷன் கால்களை உடைத்தது பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈவு இரக்கமில்லாத வெங்கடேசின் மனைவி மற்றும் அவருடைய டிரைவர் மோகன் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் அவருடைய அக்கா மகன் ராஜ்குமார் உள்ளிட்ட நபர்களை கைது செய்து மிக அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

CHELLA

Next Post

89000 பேரிடம் 4400 கோடி நிதி மோசடி…..! ஹிஜாவு நிறுவன மேலாளர் கணவருடன் சிக்கியது எப்படி…..?

Sun Jun 18 , 2023
சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இந்த நிதி நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கபரும் விதத்தில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகளை வழங்கியது. அதாவது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் வாட்டி கொடுக்கப்படும் மிகப் விரைவில் முதலீட்டை விட அதிக அளவு லாபத்தை எங்கள் நிறுவனத்தின் மூலமாக சம்பாதிக்கலாம் […]
6f4e0229138bf6f84b96c5eab5d3ae3c1d5ff5e74579457db471873ddf259e05

You May Like