இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன்..!! அண்ணாமலை பரபரப்பு தகவல்..!!

Fri Jan 6 , 2023
தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக அரசு 2022-23ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. […]

You May Like