நோ லீவ்…!சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று செங்கல்பட்டு,காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

பிரம்மாண்டம்...! திருவாரூரில் இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா....!

Tue Jun 20 , 2023
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க இருக்கிறார். […]
images 3 2

You May Like