தபால் வாக்கு செலுத்திய தவறியவர்கள் இன்று வாக்களிக்கலாம் என சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த தவறி இருந்தால் அவர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் […]

இன்று மாலை தமிழகம் வரும் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்கிறார். இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் […]

இன்று முதல் 24-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 24-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் […]

Special Bus: திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி 23, 24 ஆகிய தேதிகளில் 1,730 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பிப்ரவரி 24-ம் தேதி பவுர்ணமி, 25-ம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, […]

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் […]

விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலத்தில் நடந்த விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் சனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனின் Voice of Common என்ற அமைப்பு தான். இதை குறிப்பிட்டு மாநாட்டிலேயே […]

‌பண்டையக் காலம் முதல் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் இன்றும் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை அந்த நாட்டின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில்  தங்கம் கலாச்சார அடையாளமாக இருப்பதோடு வாணிபுத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க அணிகலன்களை விரும்பி அணிகின்றனர். மேலும் பங்குச் சந்தை மற்றும் வியாபாரத்திலும் […]

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம் ரூ.5,810-க்கும், ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் இன்று முதல் 15.02.2024 தேதி வரை காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள். […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மீண்டும் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமங்களுடன் கிளாம்பாக்கம் சென்று, பின்னர் அங்கிருந்து […]