இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!

இந்திய அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக 45 வயது நிரம்பிய முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆண்கள் கிரிக்கெட்டைப் போன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, பெண்கள் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வுக் குழுவின் நியமனங்களை பிசிசிஐ அறிவித்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை நீதி டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். நீது டேவிட் தவிர, பெண்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா ஆகியோரையும் பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் நியமனத்தின் போது இந்த குழு ஒன்றாக இணைந்து முடிவு எடுப்பார்கள்.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் நீது லாரன்ஸ் டேவிட் இந்திய மகளிர் கிரிக்கெட் டீமில் விளையாடியுள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 ரன்களும், 41 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 97 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 74 ரன்களும், 141 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று ஜூனியர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக விஎஸ் திலக் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர, ராந்தேவ் போஸ், ஹர்விந்தர் சிங் சோதி, பதிக் படேல், கிருஷ்ண மோகன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது தலைமையிலான குழு தான் ஒன்றாக இணைந்து தான் வீராங்கனைகளை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தேர்வுக் குழு: நீது டேவிட் (தலைவர்), ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா, ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி: வி.எஸ்.திலக் நாயுடு (தலைவர்), ரணதேப் போஸ், ஹர்விந்தர் சிங் சோதி, பதிக் படேல், கிருஷேன் மோகன்.

KOKILA

Next Post

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம்...! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம்...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Wed Jun 21 , 2023
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது பெண்களை ஆரை நிர்வாணமாக […]
images 3 4

You May Like