பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மாலை பீகார் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்……! ஆனால்…..!

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார்.


அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தின் மூலமாக பாட்னாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

இதற்கு நடுவே பீகார் மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் பீகார் மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வருகிறார்கள் என்று பேசிய விவகாரம் இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பீகார் மாநிலத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதீஷ்குமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்த நிலையில், அவர் வராமல் துணை முதலமைச்சரை அனுப்பி வைத்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இப்படி அரசியல் கட்சி தலைவர்கள் இடையே மன வருத்தம் இருக்கின்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பீகார் வருகையை எதிற்கும் விதமாக, ட்விட்டர் வலைதளத்தில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ஹேஷ்டேக்கை வடமாநில பத்திரிகையாளர்கள் தொடங்கி வைக்க ட்விட்டர் பயனர்களிடையே இந்த ஹேஷ்டேக்குக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

என்னதான் ஒருபுறம் நிதீஷ்குமாருக்கு ஸ்டாலின் மீது இந்த விவகாரத்தில் வருத்தம் இருந்தாலும், மறுபுறம் பாஜக என்ற மிகப்பெரிய ஆளுமையை தேசிய அளவில் எதிர்க்க வேண்டும் என்றால் இவருடன் கைகோர்த்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பெயரில் ஸ்டாலின் உடன் கை கோர்க்க பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முடிவு செய்துவிட்டார்.

ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, ஓராண்டு, ஈராண்டு சாதனைகள் என தமிழக அரசின் சாதனை பயணங்களை தமிழகத்தை கடந்தும் பத்திரிகைகளிலும் மற்ற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தியும் அது தற்போது தேசிய அளவில் பலன் அளிக்காமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும் தமிழக முதல்வருக்கு எதிரான கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

Next Post

அடேங்கப்பா..!! 15 டிராக்டர்கள்..!! 500 வகையான சீர் வரிசைகள்..!! கெத்து காட்டிய மாப்பிள்ளை வீட்டார்..!!

Thu Jun 22 , 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாக பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன விஷேசம் ஒரத்தநாடு பகுதியில் நடந்துள்ளது என்பதை வாங்கப் பார்க்கலாம். திருமண பரிசுகள் என்றாலே யாராலும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. புதுமண தம்பதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் பொக்கிஷமாக இருக்கும் ஒரு தோற்றத்தை உருவாக்குதே இத்தகைய சிறந்த திருமண பரிசுகள்தான். அதேபோல, குடும்பத்தில் சீர்வரிசை என்றால், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை சீர் […]
அடேங்கப்பா..!! 15 டிராக்டர்கள்..!! 500 வகையான சீர் வரிசைகள்..!! கெத்து காட்டிய மாப்பிள்ளை வீட்டார்..!!

You May Like