வரும் 30ஆம் தேதி உடன் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடுத்த தலைமைச் செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹேண்ட்ஸ் ராஜ் வர்மா வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரியும் எஸ் கே பிரபாகர், நகராட்சி நிர்வாக துறை செயலாளராக பணிபுரியும் சிவதாஸ் மீனா ,ஹன்ஸ்ராஜ் வர்மா இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தகைய நிலை தான் வ வரும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவதாஸ் மீனாவும்,ஹன்ஸ்ராஜ் வர்மா அக்டோபர் மாதமும் ஓய்வு பெற உள்ளனர்.
எஸ்.கே. பிரபாகர் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற உள்ளார். இதனால் அடுத்த தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா தான் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 30ம் தேதி இறையன்பு ஓய்வு பெறுவதால் ஜூன் மாதம் 28ஆம் தேதிக்குள் அடுத்த தலைமைச் செயலாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறையன்பு தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இறையன்புக்கு அந்த வாய்ப்பை மறுத்தால் சஹீல் அக்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இத்தகைய நிலையில் அரசின் ஆலோசராக இறையன்புவை அமர்த்தலாம் என்று முதலமைச்சர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.