சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54) என்பவர் 2️ பெண்களை வைத்து பாலி தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. நேற்று அவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், அந்த 2 பெண்களையும் இணைத்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றொருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் அதேபோல மடிப்பாக்கம் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த பிரசாந்த் (30) என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவ்வாறு நாளுக்கு,நாள் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை.
அந்த விதத்தில் தற்சமயம் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் பாலியல் தொழில்களில் ஈடுபடும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள பாவிகள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.