மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள்.
மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள். கடந்த 6 ஆண்டு காலமுயற்சிக்குப் பின் இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேக விதைப்பு (Cloud Seeding) எனப்படும் இந்த முறையில், சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயனங்களை மேகத்தின் மீது தூவும்போது அதீத குளிர்ச்சியால் மழை உண்டாகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கான்பூர் ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் மனீந்திர அகர்வால் இந்த செயற்கை மழை திட்டத்தை முன்னின்று நடத்தினார். இது குறித்து அவர் கூறுகையில்; இந்த திசையில் எங்கள் திறன்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. 2017-ல் பண்டேல்கண்டில் செயற்கை மழை பெய்ய உத்தரபிரதேச அரசு உதவ முன்வந்த பிறகு, ஐஐடி-கான்பூருக்கு இதை சோதனை செய்ய ஆறு ஆண்டுகள் ஆனது.
அப்போது, மஹோபாவில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10.30 லட்சத்துக்கு மேக விதைப்பு செய்ய சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் அது அறிவைப் பகிர்ந்து கொள்ள மறுத்தது மற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்றார்.