தமிழக மக்களே அடுத்த 5️ நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தால் இதை மறக்காதீர்கள்…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் வருகின்ற 30ஆம் தேதி வரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திறக்கிறது.


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதோடு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரான்கிட்டாகவும், குறைந்தபட்சம் 81 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் தேனியில் பெரியார் நீலகிரியில் கொடநாடு போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகள் மேலும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் வருகின்ற 30ஆம் தேதி வரையில் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

Next Post

ஷர்மிளாவுக்கு அடித்த ஜாக்பாட்..!! கார் பரிசளித்த கமல்ஹாசன்..!! குவியும் பாராட்டு..!!

Mon Jun 26 , 2023
கோவை காந்திபுரம் – சோமனூர் வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளா பணியில் இருக்கும் போதே அங்கு சென்று அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஷர்மிளா […]
WhatsApp Image 2023 06 26 at 3.19.06 PM

You May Like