விவாகரத்து செய்து பிரிந்த தம்பதிகள்…..! 3️ வயது குழந்தையை கடத்திய 20 பேர் கொண்ட கும்பல்….! நடந்தது என்ன……?

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே உள்ள மேககாமண்டபத்தை அடுத்துள்ள பிலாங்காலை பகுதியில் வசித்து வந்த பிபின்- பிரியா தம்பதியரின் 3️ வயது மகன் ஆத்விக். அந்த சிறுவன் கடமலை குன்று பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றார். இத்தகைய நிலையில், காரில் பல்லுக்கு சென்ற அந்த சிறுவனை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று கடத்திச் சென்றது.


பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் பிரியா தக்கலை காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காவல்துறையினரின் விசாரணையில் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகி இருக்கிறது.. அதாவது அந்த சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதும், மேலும் அந்த சிறுவனின் தந்தையே அந்த சிறுவனை கடத்திச் சென்றிருக்கிறார் என்ற விபரமும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் அருகே இருக்கின்ற பிபின் நண்பர் வீட்டில் கடத்திச் சென்று வைக்கப்பட்டிருந்த ஆத்விக்கை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Next Post

காதலில் விழுந்த தங்கை ஆத்திரத்தில் அண்ணன் செய்த செயல்….! இறுதியில் தங்கைக்கு ஏற்பட்ட பரிதாபம்…..!

Wed Jun 28 , 2023
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் […]
kulvinthar singh

You May Like