தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொடுக்க இருக்கும் வேளையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சர்வதேச MSME நாள் விழாவில் சுமார் 1723.05 கோடி ரூபாய் அளவிலான முதலீடு உறுதி செய்யப்பட்டது. இந்த விழாவில் SC/ST பிரிவில் தொழில்முனைவோர்-ஐ உருவாக்கும் சிறப்பு அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, 1723.05 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதோடு தமிழ்நாடு அரசின் FaMe TN மற்றும் SIDBI (Small Industries Development Bank of India) அமைப்புகள் மத்தியில் சுமார் 1510 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 7400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாபெரும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைவிட முக்கியமாக 153.22 கோடி மதிப்பீட்டில் சுமார் 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் கோடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 3 புதிய தொழிற்பேட்டைகளை அதாவது இண்டஸ்ட்ரீயல் பார்க்-ஐ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்டார்ட்அப் இந்தியா பிளாட்பார்ம் தளத்தின் தரவுகள் படி தமிழ்நாட்டில் மட்டும் 6257 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் கடந்த 2 வருட ஸ்டாலின் ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2016 முதல் 2021 காலக்கட்ட எண்ணிக்கை காட்டிலும் 2 மடங்கு அதிகம் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.