தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது […]

பாமகவை சாதி கட்சியாக முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாமக இதுவரை 6 இடஒதுக்கீடுகளை போராடிப் பெற்றுத் தந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றம் […]

காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ளவற்றில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை இடம்பெற்றுள்ளதாக […]

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கோழி உற்பத்தியாளர்களின் நடைமுறைகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கமாகச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் கறிகோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நெறிமுறையாகும். ஆனால், உற்பத்தியாளர்கள் இந்த விதியைப் […]