தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ளவற்றில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை இடம்பெற்றுள்ளதாக […]
Tamilnadu
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கோழி உற்பத்தியாளர்களின் நடைமுறைகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கமாகச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் கறிகோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நெறிமுறையாகும். ஆனால், உற்பத்தியாளர்கள் இந்த விதியைப் […]
காவிரி நீர் பகிர்வு தொடர்பாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. காவிரி நீர் பகிர்வு விவகாரம் பல ஆண்டுகளாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது. மழை நன்றாக பெய்தால் உபரி நீரை திறந்து விடும் கர்நாடகா. பருவமழை குறைவாக இருக்கும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை தருவதில்லை. […]
சென்னை மற்றும் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 10, 2026) மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி ஒன்று, கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 19 வயதான பார்த்திபன் என்ற மகன் உள்ளார். சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரின் 17 வயது மகள் திவ்யதர்ஷினியும் மாரிமுத்தும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் […]
Video Of Woman Police Officer & Other Cops Allegedly Laughing During Press Briefing On 10-Year-Old Girl’s Murder Sparks Outrage

