நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.
இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி இருக்கிறது.
பதிவு செயல்பாட்டின் போது தகவல்களை வழங்கும்போது ஆதார் சரி பார்ப்பிற்கு ஆம் அல்லது இல்லை என்ற விருப்பத்தை தேர்வு செய்யும் வசதி தற்சமயம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அரசு வைத்திருக்கும் பதிவுகளை மேலும் நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு மத்திய அரசு இந்த புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது. இதுவரையில் ஆதார் அட்டையின்றி சான்றிதழ் வழங்கப்படாது என்ற நிலை காணப்பட்ட நிலையில் இந்த புதிய மாற்றம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.