நீங்கள் 2 சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். என்றால் உங்களிடம் இந்த 5 ஆவணங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தான் அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் போதாது. அத்துடன் ஆர்சி புக் கேட்கப்படும். இந்த சான்றிதழில் வாகனத்தின் உரிமையாளரின் பெயர் வாகனத்தின் பெயர் மற்றும் இஞ்சின் விவரங்கள்ங்கள் போன்ற பல தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும். நீங்கள் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டால் உங்களுடைய பதிவு சான்றிதழ் இல்லை என்றால் உங்களுக்கு 10000 ரூபாய் அவரது ஆறு மாத கால சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதோடு 2வது முறையாக பிடிபட்டால் 15000 ரூபாய் அபராதம் அல்லது 2 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
வாகனம் ஓட்டும்போது இந்த ஆவணத்தை கையிலே வைத்திருப்பது மிகவும் முக்கியம். வாகனத்தில் இன்சூரன்ஸ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். அதனை சமர்ப்பிக்க தவறிவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படலாம். அதே நேரம் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்திய அரசு PUC சான்றிதழுக்கு தற்சமயம் அதீத முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஆகவே வாகனம் ஓட்டும்போது இந்த ஆவணத்தை உங்களுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது நிறுத்தப்பட்டு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டால், உங்களுக்கு ஆறு மாத கால சிறை தண்டனை வரையும் விதிக்கப்படலாம் மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.
வாகனம் ஓட்டும்போது அடையாளச் சான்றிதழை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விசாரணையின் போது நீங்கள் காட்டியுள்ள ஆவணங்களுடன் பொருந்துமாறு அதிகாரி அதனை பயன்படுத்த கேட்க கேட்கலாம் அவசர காலங்களில் ஆதார் அட்டை மற்றும் கடவுச்சீட்டு அல்லது வேறு ஏதாவது ஆவணங்களை எப்போதும் வைத்திருப்பது அவசியம்.