உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் மருந்து நிறுவன அதிபர் ஒருவர் வீட்டின் படுக்கையறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மருமகளே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி முன்னாள் வீட்டு ஊழியர் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக மருமகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கான்பூர், கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரத்தன் ஆர்பிட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வினீத் மினோச்சா தனது மகன் […]

உறவுகளில் நம்பிக்கையைவிட சந்தேகம் மேலோங்கும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக மாறிவிடுகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கொலை செய்து, உடலை துண்டுகளாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்ததாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுகாத்தி அருகே உள்ள பசிஸ்தாபூர் பகுதியில் […]

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல் போனதால், அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இவர்களது மகள் பூவரசி, வயது 21, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை பழனிசாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். […]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 23ஆம் தேதி, 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு Good Touch and Bad Touch குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் நடத்தியுள்ளார். வகுப்பின் போது, “யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பயப்படாமல் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார். வகுப்பு முடிவடைந்ததும், 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி […]

பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள், அறிவியல் தடயங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த தேவ்குமாரின் மனைவி சுமிதா […]

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்களே தங்களுக்குநடக்கும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றனர். இதற்கு உதாரணமாக, சென்னையில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை […]

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. முன்பெல்லாம் குடும்பத்தில் பெரியவர்கள் இணைந்து வசித்ததால், பெற்றோர் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளை கவனிக்கவும், அவர்களுடன் உரையாடவும் வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் பல தம்பதிகள் பெற்றோர்களுடன் இணைந்து வாழ்வதை விரும்பாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கணவன், மனைவி மற்றும் குழந்தை மட்டுமே உள்ள சிறிய குடும்ப அமைப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் […]

புதுடெல்லியில் உள்ள ஜகட்புரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகீம். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, இவருக்கும், 20 வயதான அலிஷா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, முஸ்தகீம் இரவு நேரத்தில் உறங்கியபடி உயிரிழந்துவிட்டதாக அலிஷா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்தகீம் உறவினர்கள் உடனடியாக முஸ்தகீமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், திடீரென சுரேந்திர சர்மா காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சுரேந்திர சர்மா மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேந்திர சர்மாவை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 45 நாட்களாக தேடியும் போலிசாரால் சுரேந்திர சர்மாவை கண்டுபிடிக்க […]