80-களில் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், தற்போது காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமைத்து வந்தார். தற்போது யூடியூப் பக்கத்தில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பிரபலத்துடன் பேட்டி எடுத்த போது ஷகீலா தனது வாழ்க்கையில் நடந்து ஒரு மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “என் அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால், அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர் எழுதியது எனக்கு புரியாததால் அவரிடம் சந்தேகத்தை கேட்டேன். அப்போது அவர் என் அருகில் வந்து என்னை தவறான முறையில் தொட்டு என்ன சந்தேகம் இப்போ சொல்லு என்றார்.
உடனே நான் அவரை பளார் பளார் என்று பயங்கரமாக அடித்தேன். நான் அடித்த சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் உள்ளே வந்து தடுத்து, என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் எல்லா துறையிலும் இருக்கிறது என்பதற்காக கூறினேன்” என்றார்.